தீவிர சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடுவது என சுமூக முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் குறித்தும் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களாலும் விஜயும் சங்கீதாவும் காணொலி காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில் தான் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை வரும் ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று விசாரணை நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜராக உத்தரவிட்ட நிலையில் அவர்களது வழக்கறிஞர்கள் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பரஸ்பரமாக இருவரும் பேசி பிரிந்துவிடுவதாக விஜய் சங்கீதா தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டது. இதனை ஏற்று வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
ஆறுமுகம் மனோன்மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..
மலர்வு 16.04.1948 உதிர்வு 15. 01.2026 அமரர் திரு சிறி லக்சுமிரஞ்சன் இராசநாயகம்
மலர்வு 16.04.1948 உதிர்வு 15. 01.2026
அமரர் திரு சிறி லக்சுமிரஞ்சன் இராசநாயகம்
Latest updates and news